30 ஆண்டு சாதனையை 3 ஆண்டில் செய்து காட்டியவர் முதலமைச்சர்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

முப்பது ஆண்டுகளில் செய்யும் பணிகளை, மூன்றே ஆண்டில் செய்து முடித்து,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதனை படைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு, 294 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழக மக்கள் முன்னேற்றம் அடைய, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறமையாக ஆட்சி செய்து வருவதாக கூறினார்.

Exit mobile version