இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது. அடுத்ததாக நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கயானாவில் நடந்த முதல் போட்டி மழையால் ரத்தானது. இந்த நிலையில், 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறுகிறது. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால், முதல் போட்டியை போன்றே, 2-வது போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version