கழிவறை கட்டிதராத தந்தை மீது புகாரளித்த 2 ஆம் வகுப்பு மாணவி, தூய்மை இந்தியா திட்ட தூதுவராக நியமனம்

ஆம்பூரில் கழிவறை கட்டிதராத தந்தை மீது புகாரளித்த 2 ஆம் வகுப்பு மாணவி, தூய்மை இந்தியா திட்ட தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரம் பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்தவர் எஸ்ஸான்னுல்லா. அவரது மகள் ஹனீப்பா ஜாரா 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், தனது தாயுடன் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற ஹனீப்பா ஜாரா, தனது வீட்டில் மின்சாரம் மற்றும் கழிவறை வசதி இல்லை என்றும் கழிவறை கட்டிதராத தனது தந்தை மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, காவல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளின் துரித நடவடிக்கையால், ஹனீப்பாஜாரா வீட்டில் கழிவறை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே மாணவி ஹனீப்பாஜாராவை தூய்மை இந்தியா திட்ட ஆம்பூர் தூதுவராக, நகராட்சி ஆணையர் நியமித்துள்ளார்.

Exit mobile version