தாயை துடைப்பத்தால் அடித்து கொடுமை செய்த 17 வயது சிறுவன் – போலீசார் முன்னிலையில் தாயிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்

கர்நாடகாவில் பெற்ற தாயை கொடுமைப்படுத்திய சிறுவன் போலீசார் முன்னிலையில் மன்னிப்பு கோரினார். பெங்களூரு ஜே.பி நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தன் தாயை துடைப்பத்தால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இது குறித்து தாங்களாக முன்வந்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுவனை பிடித்து விசாரித்தனர். படிப்பதில்லை என்பதால், பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் குறை கூறியதால், தாயை அடித்ததை சிறுவன் ஒப்புக் கொண்டான். இதனைத் தொடர்ந்து, அவனுக்கு அறிவுரை கூறிய போலீசார், தாயிடம் மன்னிப்பு கேட்க வைத்தனர்.

 

Exit mobile version