16வது புத்தக கண்காட்சி: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

திருப்பூரில் 16வது புத்தக கண்காட்சியை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

திருப்பூரில் 16 வது புத்தக கண்காட்சி பறையிசை கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கண்காட்சியினை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மொத்தம்144 அரங்கங்களில் பல்வேறு தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து நூல்களுக்கும் 10 சதவிகித கழிவு வழங்கப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இப்புத்தக கண்காட்சியில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவியருக்கான அறிவியல் நிகழ்வுகள், கருத்துரைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

Exit mobile version