குடிநீர் பற்றாக்குறையை நீக்கிய அரசுக்கு பொதுமக்கள் நன்றி

வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில் அரசு புதிய ஆழ்துளை கிணறு அமைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த கீழ்பாலானந்தல் கிராமத்தில் கடந்த சில மாதமாக கடும் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது. இங்கு 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள திறந்தவெளி கிணற்றில் வறட்சியால் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதையடுத்து குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மேல்நீர் தொட்டியின் மூலம் முறையாக குடிநீர் வழங்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Exit mobile version