வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதவியமைக்கு நன்றி : கிருஷ்ணசாமி

எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த 2 தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கியதற்கும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளதற்கும், முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில்  இதனை தெரிவித்தார். 

Exit mobile version