புவனகிரி பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து கொடுத்த தமிழக அரசுக்கு மக்கள் நன்றி

புவனகிரி முக்கியப் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து கொடுத்த தமிழக அரசுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள புதிய பாலத்தின் அருகில் இருளாக இருப்பதால், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் விரைந்து வந்து ஆய்வு செய்த அதிகாரிகள், அவ்விடத்தில் உயர்கோபுர மின்விளக்கை அமைக்கும் பணியை சிலநாட்களுக்கு முன்பு துவக்கினர். அதன் பணிகள் முடிவடைந்து, உயர்கோபுர மின்விளக்கு எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள இருள் அகன்று, விபத்து ஏற்படும் சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. உயர்கோபுர மின்விளக்கை விரைவில் அமைத்து தந்த தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Exit mobile version