வாரணாசி மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

வாரணாசி சென்ற பிரதமர் மோடி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தன்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாலையில் இருபுறமும் மக்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். வாரணசியின் முக்கிய பகுதிகள், குடியிருப்புகள் பகுதிகளில் ஊர்வலமாக சென்று மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். பின்னர், பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார். இதையடுத்து காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்ற பிரதமர்மோடி வழிபாடு செய்தார். பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version