கொப்பரைத் தேங்காய்க்கு 95 ரூபாய் விலை பெற்று தந்த தமிழக அரசுக்கு தென்னை விவசாயிகள் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
பொள்ளாச்சியில் வேளாண் துறை சார்பில், தென்னையில் ஒருங்கிணைந்த பயிற்சி மேலாண்மை தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக தென்னையில் உள்ள பல்வேறு ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவ்விழாவில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி எம்.பி.மகேந்திரன், வால்பாறை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு ஆகியோர் கலந்துகொண்டு அரங்குகளை பார்வையிட்டனர். விழாவில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், கொப்பரை தேங்காயின் விலையை உயர்த்தியுள்ளது, தென்னை விவசாயிகளுக்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். இதற்காக தமிழக அரசுக்கு தென்னை விவசாயிகள் நன்றி தெரிவித்து கொண்டனர்.