மக்களவை தேர்தலில் ஒத்துழைத்த வாக்காளர்களுக்கு நன்றி-சுனில் அரோரா

மக்களவை தேர்தலில் ஒத்துழைத்த வாக்காளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நன்றி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் பணியில் அரசு அதிகாரிகள், காவல்துறை, துணைராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.இந்நிலையில் தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இதற்கு ஒத்துழைப்பு அளித்த வாக்காளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை மற்றும் துணைராணுவப்படையினருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Exit mobile version