அரசின் மகத்தான பணிக்கு நன்றியை தெரிவித்த மாணவிகள்

நிவாரண பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு பள்ளி மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த நிவாரண பொருட்களை வழங்குமாறு தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி அரிசி, பருப்பு, குடிநீர் பாட்டில்கள், புதிய ஆடைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை மாணவர்கள் பள்ளி தாளாளரிடம் ஒப்படைத்தனர். அப்போது, தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் சிறப்பாக செயல்படுவதாகவும், தமிழக அரசின் இந்த மகத்தான பணிக்கு தங்களது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.

Exit mobile version