கஜா புயலால் மின் வாரியத்திற்கு ரூ.1000 கோடி இழப்பு – மின் துறை அமைச்சர் தங்கமணி

கஜா புயலால் மின் வாரியத்திற்கு இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் தடையை சீர் செய்து விரைவாக மின்சாரம் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மின் துறை அமைச்சர் தங்கமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கதர் கிராம தொழில் வாரிய அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, மின்சார வாரியத்திற்கு மட்டும் இதுவரை கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கணக்கெடுக்கும் பணி முடிந்த பின்பே முழுமையான இழப்பு தெரிய வரும் என்றும் கூறினார்.

 

 

Exit mobile version