ஸ்டாலின் பதற்றத்தில் பேசுகிறார் – தமிழிசை

இன்னும் 48 மாதங்களுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை தொடங்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரை அடுத்து பெருமாநல்லூர் அருகே பா.ஜ.க. சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதற்கான மைதான அமைப்பு ஏற்பாடுகள் நடந்துவந்தது.

இந்தநிலையில், பொதுக்கூட்ட நிகழ்விட பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு கால்கோல் நட்டு பூஜை செய்து துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திமுக தலைவர் ஸ்டாலின் பதற்றத்துடன், என்ன சொல்கிறோம் என்பதை அறியாமல் பேசுவதாக குற்றம்சாட்டினார். 48 மாதங்களுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை தொடங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version