மத்திய, மாநில அரசுகள் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது – மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றச்சாட்டு

தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட 274 குடியிருப்புகளுக்கான காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய தம்பித்துரை, தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருவதாக கூறினார். ஏழை விவசாயிகளுக்கு 6 ஆயிரம் வழங்கும் திட்டம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் கொடுக்கும் திட்டத்தின் மூலம் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருவதாக தம்பிதுரை தெரிவித்தார். மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினால் பயனடைந்தவர்கள், அதே ஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் அதிமுக ஆட்சி குறித்து விமர்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

Exit mobile version