சந்திரபாபு நாயுடு – ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் – மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

சென்சார்போர்டு முறையாக செயல்பட்டிருந்தால், சர்கார் படத்தில் சர்ச்சை ஏற்பட்டிருக்குமா? என்று  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியை அடுத்த மணப்பாறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு என்பது வெறும் அரசியல் நாடகம் என்றார்.

அரசியலில் என்ன நடக்கும் என்பது தங்களுக்கு நன்றாக தெரியும் என்று தம்பிதுரை கூறினார். சென்சார் போர்டு முறையாக செயல்பட்டிருந்தால், சர்கார் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று அவர் தெரிவித்தார்.

 

 

Exit mobile version