வடலூர் வள்ளலார் கோவிலில் தைப்பூச ஜோதி தரிசன விழா

வடலூர் சத்திய ஞானசபையில் 148வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி ஏராளமான மக்கள் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. ஜீவகாருண்ய நெறிகளையும், செம்மையான அறநெறிகளையும் வாழ்வியலில் தத்துவங்களை போதித்தவர் வள்ளலார். இங்கு தைப்பூச நாளில் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி நிலையை அடைந்ததால் அன்றுமுதல் இன்றுவரை ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. இன்று தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு  148வது ஆண்டாக ஜோதி தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.ஏராளமான மக்கள் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனர்.

Exit mobile version