தைப்பூசத்தையொட்டி மாரியம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. 9ம் நாளாளில் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் தெப்பத்தில் எழுந்தருளிய அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Exit mobile version