தாடி பாலாஜி, மனைவி நித்யாவுக்கு கொலை மிரட்டல் – மீண்டும் வீதிக்கு வந்த குடும்ப சண்டை

காமெடி நடிகர் தாடி பாலாஜி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், படங்களில் நடித்தும் வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இவருக்கும், இவரது மனைவி நித்யாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து வரை வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது.

ஒருவரை பற்றி ஒருவர் மாற்றி, மாற்றி குறைகளை கூறி வந்தனர். அடித்து கொடுமை படுத்துகிறார், மிரட்டுகிறார் என்று தாடி பாலாஜி மீது நித்யா வைத்த புகார்கள் ஏராளம்.

இருப்பினும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் கமல் சமாதானப்படுத்தி இருவரையும் சேர்த்து வைத்தார். நிகழ்ச்சியில் 100 நாள்  இருந்தது போலவே, வெளியிலும் 100 நாட்கள் இருந்தால் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளது என்று நித்யா தாடி பாலாஜியிடம் கூறியுள்ளார்.

ஆனால் பாலாஜி மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் தேதி குடிபோதையில் வந்து வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்தார் என்றும் செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றும் மனைவி நித்திய காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் பாலாஜியை போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, பாலாஜி தான் வெளிநாட்டு படப்பிடிப்பில் இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் திரும்பி வந்து, விசாரணைக்கு வருவதாக கூறியுள்ளார்.

Exit mobile version