ஜவுளி ஜரிகை கிடங்கில் தீ விபத்து

சேலத்தில் ஜவுளி ஜரிகை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஜரிகை ரகங்கள் சேதமடைந்தன.

சேலம் செவ்வாய்ப் பேட்டையில், ஜவுளி ஜரிகை கிடங்கு சன்னியாசிகுண்டு பகுதியில் உள்ளது. இந்த ஜவுளி கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த

விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஜரிகை ரகங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 3 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தால், இந்த கிடங்கில் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

Exit mobile version