தீவிரவாதிகள் – பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்ஹாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

குல்ஹாம் மாவட்டத்தில் உள்ள கெல்லம் தெவசர் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கி சண்டையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தீவிரவாதிகள் யாரேனும் கொல்லப்பட்டனரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. துப்பாக்கிச் சண்டை காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

Exit mobile version