பாதுகாப்பு படை மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் பகுதியில் ராஷ்டிரிய ரைபிள் படையின் 42-வது பிரிவை சேர்ந்த வீரர்கள், சிறப்பு தேடுதல் குழுவுடன் இணைந்து ட்ரால் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், அவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இது குறித்த தகவல் அறிந்த சி.ஆர்.பி.எஃப் பட்டாலியன் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து தூப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version