தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையில் துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே நடைபெற்ற சண்டையில்2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குல்காமின் கோபால்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். சில மணிநேரங்கள் நீடித்த இந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர், துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Exit mobile version