காஷ்மீரில் ராணுவ தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

 

 

காஷ்மீரில் நடைபெற்ற சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுத்து நிறுத்தும் விதமாக ராணுவத்தினர் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அங்குள்ள ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதல் நடத்திய ராணுவத்தினர் தீவிரவாதி ஒருவனை சுட்டுக்கொன்றனர்.

தீவிரவாதிகள் சிலர் தப்பி சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Exit mobile version