பிரேசில் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல்

பிரேசில் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 52 கொல்லப்பட்டுள்ளதாகவும் அதில் 16 பேரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசிலில் உள்ள அமேஸோனாஸ் சிறைச்சாலையில், கைதிகளுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். சிறைவளாகத்தில் உள்ள பல பகுதிகளுக்கு கைதிகள் தீ வைத்தனர். பலமணி நேரம் நீடித்த இந்த வன்முறையில் 52 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 16 பேரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலர் பலத்த காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

Exit mobile version