ஜம்மு காஷ்மீரில் எல்லையில் பதற்றமான சூழல்

ஜம்மு, காஷ்மீரில் எல்லையில் 4வது நாளாக தொடரும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய வீரர்களின் பதிலடியால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறல் நடத்தி வரும்நிலையில், இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையோர மாநிலங்களில் முன்னெச்சரிக்கையாக வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜம்மு, காஷ்மீர் எல்லையில் கடந்த 4 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில், அக்கனூர் பகுதியில் அதிகாலை தொடங்கி பாகிஸ்தான் நிகழ்த்தும் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இதனால்,எல்லையோர பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Exit mobile version