3 பேரை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில், தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவு

தென்காசி மாவட்டம் நெட்டூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்துவந்தார். அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 2016ம் ஆண்டு கோவிந்தசாமி அவரது மனைவி, மகள் ஆகியோரை முத்துராஜ் வெட்டி கொலை செய்தார். இச்சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துராஜை கைது
செய்தனர். இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில்
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. இந்தநிலையில், குற்றவாளியான முத்துராஜுக்கு தூக்குதண்டனை வழங்கி, நீதிபதி சி. விஜயகுமார் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

Exit mobile version