தென்காசி, செங்கல்பட்டு சிறப்பு அதிகாரிகள் இடமாற்றம்

தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, செங்கல்பட்டு மற்றும் தென்காசியை தனி மாவட்டங்களாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட 2 மாவட்டங்களுக்கும் சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு கடந்த 26ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அருண் சுந்தர் தயாளன் மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு ஜான் லூயிஸ் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிறப்பு அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழக அரசால் மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்துக்கு ஜி.கே.அருண் சுந்தர் தயாளனும், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஜான் லூயிஸும் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version