புளியமரத்தில் டெம்போ வேன் மோதிய விபத்து

திருவண்ணாமலை அருகே புளியமரத்தில் டெம்போ வேன் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரியந்தல் பகுதியில் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் டெம்போ வேன் மோதிய விபத்தில் முருகன், ஞானசேகரன் மற்றும் சேவூ ஆகிய 3 ஆண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் சேவூவின் மனைவி ராஜம்மாள் மற்றும் பிரவீன்ராஜ், குமார் ஆகியோர் படுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளானவர்கள் கேளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், பசுமாடு வாங்கிக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி திரும்பும்போது, இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

Exit mobile version