சேலத்தில், 3-வது நாளாக கோவில் உண்டியல்களில் மர்மநபர்கள் கைவரிசை

சேலம் அருகே தொடர்ந்து மூன்றாவது நாளாக கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அன்னதானப்பட்டி, மணியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஐந்து கோயில்களில் மர்மநபர்கள் கொள்ளையடித்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திருமலைகிரி, சிவதாபுரம் பகுதிகளில் நான்கு கோயில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை  சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மூன்றாவது நாளாக கொண்டலாம்பட்டி அருகே உள்ள காட்டூர் மாரியம்மன் கோயிலின் உண்டியலையும்  உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளில் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் குழுவாக செயல்பட்டு ஒரே நேரத்தில் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version