கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை கொள்ளை

செங்கல்பட்டு அருகே கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் விநாயகர் சிலை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பொன்விளைந்த களத்தூர் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம். 250 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலில், இரண்டரை அடி உயரமும், 50 கிலோ எடையும் கொண்ட, ஐம்பொன்னால் ஆன விநாயகர் சிலையை, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version