கோயில் நிலத்தை பூஞ்சோலையாக மாற்றிய பூசாரி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பூசாரி ஒருவர் கோயில் நிலத்தில் பலவகையான பூக்களை பயிரிட்டு அசத்தி வருகிறார்.

முதுகுளத்தூர் அருகே காக்கூரில் கோயில் நிலத்தில் அக்கோயிலின் பூசாரி துரைராஜ், பலவகையான பூக்களை பயிரிட்டு அசத்தி வருகிறார். காக்கூரில் உள்ள அல்லிராஜா கோயில் அருகே கருவேல மரங்களும் புதர்களும் மண்டிக்கிடந்த 2 ஏக்கர் நிலத்தை கோயில் சார்பில் வாங்கிய அவர், அங்கிருந்த கருவேல மரங்களை அகற்றிவிட்டு, கோயில் பூஜைக்கு தேவையான மலர்களை பயிரிட்டுள்ளார். புதர் மண்டிக்கிடந்த இந்த இடம் தற்பொழுது காண்பவர்களை கவரும் அழகிய பூஞ்சோலையாக மாறியுள்ளது.

Exit mobile version