முத்து கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி ஜேஷ்டாபிஷேகத்தில் முத்து கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்று வருகிறது. கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்குச் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு, ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. ஊஞ்சல் சேவை முடிந்ததும் கோயிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர்கள் முத்துக்கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஜேஷ்டாபிஷேகத்தின் 2வது நாளையொட்டி கோயிலில் வசந்த உற்சவம் ரத்து செய்யப்பட்டது. ஜேஷ்டாபிஷேகத்தின் 3வது நாளில் உற்சவ மூர்த்திகளுக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. இந்த தங்க கவசம் அடுத்த ஜேஷ்டாபிஷேகம் வரை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version