முருகன் கோயில்களில் களைகட்டிய வைகாசி விசாக திருவிழா

வைகாசி விசாக திருவிழாவையொட்டி முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாக திருவிழா பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோயில்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளில் விழா களைகட்டி உள்ளது. முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி, சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக பாதுகாப்பு மற்றும் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில், வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. கோயில்களில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கடலில் புனித நீராடிய சுவாமியை தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version