கோபி கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயிலின் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி

கோபிசெட்டிபாளையம் அருகே, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் தீ குண்டம் மற்றும் தேர் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.முன்னதாக கடந்த மாதம் 26ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கிய திருவிழாவில், நாள்தோறும் அம்மனுக்கு காலை – மாலை என இருவேளைகளிலும் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் நடைபெற்றது. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தீக்குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 

Exit mobile version