திண்டுக்கல் பெரியகாளியம்மன் கோவிலின் பங்குனி பெருவிழா

திண்டுக்கலில் உள்ள பெரியகாளியம்மன் கோவிலின் 70 ஆம் ஆண்டு பங்குனி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள டோபிகானல் பகுதியில் பெரிய காளியம்மன் கோவில் அமைந்துள்ளது, இக்கோயிலின் 70 ஆம் ஆண்டு பங்குனி பெருவிழா கொண்டாடப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கிய இந்த விழாவில் தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு தேர்பவனியில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பொதுமக்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. பின்னர் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அழகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

Exit mobile version