கோவில் விழாவில் 21 அரிவாள்கள் மீது ஏறி நடந்த பூசாரி

தூத்துக்குடி அருகே நடைபெற்ற கோவில் விழாவில் 21 அரிவாள்கள் மீது ஏறி நடந்து பூசாரி வியப்பை ஏற்படுத்தினார்

கோவில்பட்டி அடுத்துள்ள இளையரசநேந்தல் கருப்பசாமி கோவிலில் மாசி கொடை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கோவில் பூசாரி கருப்பசாமி என்பவர் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த 21அரிவாள்கள் மீது 68 முறை நடந்து அருள் வாக்கு கூறினார். மேலும் 68 கிலோ மிளகாய் தூள் கரைத்த தண்ணீரை உடலில் ஊற்றியும் பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Exit mobile version