கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கோலாகலம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

சென்னையில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டு பங்குனித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நடைபெற்று வருகிறது. நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் கபாலீஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய கபாலீஸ்வரர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். ஆயிரக் கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து இறைவனை வழிபட்டனர்.

Exit mobile version