குரங்குகளுக்கு உணவளிக்கும் கோயில் நிர்வாகி

உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு உணவளித்து வரும் சாமியாருக்கு பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அருகே உள்ள பிரம்மரிஷி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது, காகபுஜண்டர் சந்நிதி. இதன் நிர்வாகியாக இருப்பவர் சித்தர் ராஜ்குமார்.

மழை பொய்த்ததால் , மலை வறண்டு போய் உணவுக்கு வழியின்றி தவித்து வரும் குரங்குகளுக்கு , மனிதாபிமானத்தோடு உணவளித்து வருகிறார் இந்த சாமியார். இதனால் வேளாவேளைக்கு குரங்குகள் உணவுக்காக இங்கு படையெடுத்து வருகின்றன.

அவற்றுக்கு, அரிசி சாதம் ,உப்புமா ,பொங்கல், வேர்க்கடலை என விருந்து வைக்கிறார். கூடவே பக்தர்களும் தங்களால் இயன்றதை வாங்கி வந்து தருகிறார்கள். இவரது பணிக்கு பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.

Exit mobile version