கர்நாடகாவில் தலைவர்களின் தொலைப்பேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு

கர்நாடகாவில் தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பல நாட்களாக தொடர்ந்த அரசியல் பரபரப்பு முடிந்து, மீண்டும் பா.ஜ.க, ஆட்சி அமைந்த நிலையில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு காவல்துறை ஆணையர் பதவிக்கு, பலர் போட்டியிட்ட நிலையில், பாஸ்கர ராவ் என்பவர்  எடியூரப்பாவால் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாஸ்கர ராவ்  இடைத்தரகர் ஒருவரிடம் பேசி தனக்கு ஆணையர் பதவியை பெற்றுத் தருவதற்கு பேரம் பேசிய, தொலைப்பேசி உரையாடல் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது.

இதனையடுத்து விசாரணை துவங்கிய போது, பல அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்களின் தொலைபேசி உரையாடல்கள் கடந்த சில மாதங்களாக, ஒட்டுக் கேட்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது பற்றி தனக்கு எந்த தொடர்பும் இல்லை, என முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இந்த தொலைபேசி ஒட்டு கேட்பு சம்பவங்கள் குறித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்கும்படி தலைமை செயலாளரிடம் முதல்வர் எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார். 

Exit mobile version