தொலை தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் பாகம் கண்டுபிடிப்பு

நிலவில், தொலை தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் பாகங்களை நாசா கண்டுபிடித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோ ஜூலை, 22ல், சந்திரயான் – 2 விண்கலத்தை, விண்ணில் ஏவியது. இதன் சுற்று வட்டப்பாதை அதிகரிக்கப்பட்டு, நிலவை நெருங்கிய நிலையில் 2 புள்ளி 1 கிலோ மீட்டர் தொலைவில், விக்ரம் லேண்டர் கருவியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டர் கருவி, நிலவில் வேகமாக தரையிறங்கி இருக்கக் கூடும் என்று கூறப்பட்டு வந்த வந்த நிலையில், விக்ரம் லேண்டரின் உடந்த பாகங்களை அமெரிக்க வின்வெளி நிறுவனமான நாசா கண்டுபிடித்துள்ளது.
இது தொடர்பான புகைபடத்தையும் நாசா வெளியிட்டுள்ளது.

Exit mobile version