தெலங்கானாவில் டெம்போவும் அரசு பேருந்தும் நேருக்குநேர் மோதி விபத்து : 7 பேர் பலி

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் டெம்போவும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டெம்போவில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் தீவிர காயங்களுடன் நலகொண்டா மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version