வெள்ளத்தில் தத்தளிக்கும் தெலுங்கானா!!

தெலங்கானா மாநிலம் விகராபாத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

விகராபாத்தில் உள்ள தண்டூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில், மேற்கூரைகளில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை, மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர். கிராமத்திற்கு செல்லும் பாதைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version