தமிழ் ஈர்க்கும்… நான் தமிழார்வத்தால் இங்கு வந்தேன்: கண்ணதாசன் நிகழ்வில் தமிழிசை சௌந்தர்ராஜன்

கவிஞர் கண்ணதாசனின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் இதுகுறித்து தெலங்கானா ஆளுநர், தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியதாவது: 

எங்கே இருந்தாலும் தமிழால் ஈர்க்கப்படுபவர் நான், தமிழ் ஆர்வலர் என்ற முறையில் இங்கு வந்துள்ளேன். வாழ்க்கை நிலையை மிக எளிமையாக மக்களுக்கு எடுத்துரைத்த கவிஞர் கண்ணதாசன் என்று கண்ணதாசனுக்கு புகழாரம் சூட்டினார்.  

மேலும், “27ம் தேதி புதுவையில் பதவியேற்பு நடைபெற உள்ளது, 5 அமைச்சர்கள் பட்டியல் குடியரசு தலைவருக்கு அனுப்ப்பட்டுள்ளது ஒப்புதல் வந்த உடன் 27ம் தேதி பதவியேற்பு நடைபெறும்” 

பின்னர் டெல்டா பிளஸ் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “டெல்டா பிளஸ் மிக வேகமாக பரவ கூடியது தான், எந்த வகை வைரஸாக இருந்தலும் தடுப்பூசி போட்டு கொண்டு முக கவசம் அணிந்தால் எதிர்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

Exit mobile version