தெலுங்கானா மாநில கவர்னராக இன்று பதவியேற்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக இன்று பதவியேற்கிறார்.

தெலங்கானா தலைநகர் ஐதரபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று  பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில், தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் செளகான், தமிழிசைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்பு விழாவில், தெலங்காநா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். 

Exit mobile version