இளம்பெண்னை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞர் மீது புகார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 17 வயது இளம்பெண்னை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞர் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர்  பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண்ணுக்கும் பள்ளியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மாணவி 10 ம் வகுப்பு முடித்து வீட்டிலேயே இருந்த நிலையில், பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த அரவிந்த்,  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியுள்ளார். இதனால் கடந்த 21 ஆம் தேதி அந்த பெண் அரவிந்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை தெரிந்து கொண்ட அரவிந்த், இளம்பெண்ணை மீண்டும் வீட்டிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். மகள் கர்பமானதை அறிந்த அப்பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், புகாரை திரும்ப பெற சிலர் அப்பெண்ணின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அப்பெண்ணின் பெற்றோர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மீண்டும் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் தலைமறைவான அரவிந்தை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version