ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று காலை 9 மணி வரை அவகாசம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று காலை 9 மணி வரை  பள்ளிக் கல்வித்துறை அவகாசம் அளித்துள்ளது. 

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று காலை 9 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அப்பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதை தொலைபேசி வாயிலாகவோ, குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் ஆப் மூலமாகவோ ஆசிரியர்கள் உறுதிப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  காலிப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version