போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

நாளைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி அரும்பாக்கத்தை சேர்ந்த கோகுல் என்ற மாணவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு வரும் 25 ம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவிட்டது.மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் போது ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Exit mobile version