ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் பணிக்கு வர தேவையில்லை!!!

ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் பணிக்கு வர தேவையில்லை என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால், அனைத்து ஆசிரியர்களும் 21ம் தேதி முதல் பணிக்கு வரவேண்டுமென ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த தேர்வு ஜூன் 15ம் முதல் 25ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிரியர்கள் யாரும் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version