ஆசிரியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு!

கொரனா தடுப்பு நடவடிக்கையாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஆசிரியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க இருப்பதாக, முதுநிலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் பொன்.செல்வராஜ் தெரிவித்துள்ளார். நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஆசிரியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க இருப்பதாக தெரிவித்தார். அதன்படி, 3 கோடியே 60 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் எனக் கூறினார். மேலும், பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் அரசு விதிகளை பின்பற்றி, நாட்டை பாதுகாக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version